தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகி தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்: பயிர்கள் சேதம்

Advertisement

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மானாவாரி பயிராக ராகி பயிரிட்டுள்ளனர். தற்போது ராகி பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து ராகி பயிரை சேதப்படுத்தி வருகின்றன.

விவசாயிகள் தினமும் இரவு நேரத்தில் இடைவிடாமல் காவல் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புட்டுராஜ்(49) என்பவரது விளை நிலத்தில் புகுந்து ராகி பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

இரவு நேரத்தில் தொடர்ச்சியாக அப்பகுதியில் மழை பெய்ததால் யானைகள் நடமாட்டத்தை விவசாயிகள் கண்காணிக்க முடியவில்லை. நேற்று காலை விவசாயி புட்டுராஜ் தன்னுடைய விவசாயத் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம் அடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News