வெளி மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, மணல் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு விதித்த தடையை எதிர்த்த வழக்கின் விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை: வெளி மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் மணல் போன்றவற்றை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு பிறப்பித்த 3 மாத தடைக்கு எதிரான வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றக் கிளை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இதே கோரிக்கையுடன் வேறு மனு விசாரணைக்கு வர இருப்பதால் சேர்த்து விசாரிக்கக் கோரி அரசுத் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
