தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் ஏரி உபரிநீர் திறப்பு; கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. சோழவரம், செங்குன்றம், புழல்,பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையின் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

Advertisement

தற்போது, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 21.2 அடியை எட்டி நிரம்பி உள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 470 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 640 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரி நீர் அளவு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிப்பு. ஏரியின் மொத்த அடி உயரமான 35 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில், மெட்ரோ குடிநீர் தேவைக்காக 17 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement