தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றதால் பயங்கரம் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: மகன் உயிர் ஊசல்

Advertisement

திருமலை: நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த `புஷ்பா 2’ பான் இந்தியா படம் நேற்று அதிகாலை வௌியிடப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் உள்ள தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கூட்டம் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் திரண்டனர். பெரும்பாலானோர் குடும்பம், குடும்பமாக `புஷ்பா 2’ படம் பார்க்க வந்தனர். அதன்படி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் தில்சுக் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது மனைவி ரேவதி(39), மகன் ஸ்ரீதேஜ்(9), மகள் சன்விகா(7) ஆகியோருடன் அதிகாலை ஐதராபாத் ஆர்.டி.சி.எக்ஸ் சாலையில் உள்ள தியேட்டருக்கு புஷ்பா 2 சினிமா பார்க்க சென்றனர்.

அப்போது, நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு வந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து ஓடினர். இதனால், தள்ளுமுள்ளு காணப்பட்டது. இதில் பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கினர். கீழே விழுந்த அவர்கள் மேல் ஏராளமானோர் விழுந்தனர். இதில் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனால் சினிமா தியேட்டர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரேவதி, ஸ்ரீதேஜ் இருவரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் ஸ்ரீதேஜ் சுயநினைவில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். காவல்துறையினர் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள், தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News