தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடிக்கடி ஏற்படும் விபத்துகள்; புன்னார்க்குளம் வளைவு சாலை நேராக்கப்படுமா?... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை நெடுஞ்சாலை மிக முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும் இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்ல இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். மிகவும் பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களான உவரி, ஆற்றங்கரை பள்ளிவாசல், திருச்செந்தூர், ராமேஸ்வரம், குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி விமான நிலையம் செல்பவர்கள் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

Advertisement

இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் அமைந்துள்ளது புன்னார்க்குளம் சந்திப்பு. இதன் அருகில் இருபுறங்களில் இருந்தும் 2 ஊரக சாலைகள் சந்திப்பதாலும், ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் புன்னார்க்குளம் சந்திப்பில் சாலை மிகவும் குறுகிய வளைவாக ‘எஸ்’ வடிவில் செல்வதால் ஒருபுறத்தில் இருந்து வரும் வாகனங்கள் மறுபுறத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு தெரிவதில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.

நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் அகலமாக இந்த சாலை இல்லை. ஆங்காங்கே ஆக்ரமிப்புகளும் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை நேராக செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement