தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சாப் எல்லையில் பதற்றம் 200 விவசாயிகள் கைது: சாலை தடுப்புகள் அகற்றம்

Advertisement

சண்டிகர்: பஞ்சாபில் எல்லை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபின் ஷம்பு, கனவுரி பகுதியில் விவசாயிகள் கடந்தாண்டு பிப். 13ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தலேவல் கடந்த 54 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக, மொகாலியில் ஒன்றிய குழுவினருடன் ஜக்ஜித் சிங் தலேவல் மற்றும் சர்வர் சிங் பந்தர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், அவர்கள் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஷம்பு நோக்கி புறப்பட்டனர். அவர்களை மொகாலியில் பஞ்சாப் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பஞ்சாப்-அரியானா எல்லையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூடாரங்களையும் பஞ்சாப் போலீசார் இரவோடு இரவாக இடித்து தள்ளினர். இதையடுத்து ஒரு வருடத்திற்கு பிறகு ஷம்பு-அம்பாலா நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

Advertisement