தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டம்; பஞ்சாபில் 10 தீவிரவாதிகள் கைது: பாகிஸ்தானின் சதி முறியடிப்பு

சண்டிகர்: லூதியானாவில் மக்கள் கூடும் இடத்தில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தி, பெரும் கலவரத்தை ஏற்படுத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆதரவுடன் கும்பல் ஒன்று திட்டமிடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) கவுரவ் யாதவ் உத்தரவின் பேரில், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

Advertisement

இந்த சதித் திட்டத்தின் மூளையாக செயல்பட்ட  முக்த்சார் சாஹிப் பகுதியைச் சேர்ந்த குல்தீப் சிங், சேகர் சிங் மற்றும் அஜய் சிங் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீனத் தயாரிப்பு கையெறி குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சதித் திட்டத்திற்கு உதவியாக செயல்பட்ட மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அம்ரிக் சிங், பர்மிந்தர், விஜய், சுக்ஜித் சிங், சுக்விந்தர் சிங், கரண்வீர் சிங் மற்றும் சஜன் குமார் ஆகியோர் பல்வேறு சிறைகளில் இருந்து இந்த விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், ‘மாநிலத்தில் அமைதியைக் குலைக்கும் நோக்கில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தும் பணியை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இவர்களுக்கு வழங்கியுள்ளனர். மலேசியாவில் பதுங்கியுள்ள அஜய், ஜாஸ் பெஹ்பால் மற்றும் பவன்தீப் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் மூலம் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Advertisement