தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. சட்டசபையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம்

Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காலாப்பட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த 12ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் வடமாநில மாணவியிடம் உள்ளூரை சேர்ந்த சில இளைஞர்கள் அத்துமீறிய சம்பவம் நடந்தது. மாணவி தன்னுடன் படித்த மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் அவர்களை படம் எடுத்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட மாணவிக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வடமாநில மாணவியை இளைஞர்கள் தாக்கினர். இதனால் காயமடைந்த மாணவி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி புகார் தரவில்லை. அதேநேரத்தில் இது தொடர்பான தகவல் வெளியானது. புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். வெளியாட்கள் நுழைவதை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement