தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகளில் தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

Advertisement

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடைகளின் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஜக்காம்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் தீ வேகமாக பரவி சாலையில் வெப்ப அலை வீசியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்புதுறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதே போல் வெள்ளிமேடுபேட்டை சமத்துவபுரம் அருகே குடியிருப்பு அருகில் குப்பை குவியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வெயில் காலத்தில் இதுபோன்று குப்பைகளுக்கு தீ வைப்பதால் பெரும் தீ விபத்து அபாயம் ஏற்படும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்திய போதும் பொதுமக்கள் அதை கடைபிடிக்காததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News