மக்கள் குறைதீர் கூட்டத்தில் சிறந்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மணிமேகலை விருதிற்கான பரிசுதொகை
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 568 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சமுதாய அமைப்புக்கும் ரூ.3,75,000க்கான பரிசுதொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிச்சாண்டி, கலெக்டர் (பயிற்சி) மிருணாளினி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.