தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறைத்துறை வழிகாட்டு நெறிமுறைக்கு பாராட்டு: அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

 

Advertisement

மதுரை: சிறைத்துறை வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐகோர்ட் கிளை, இதனை அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தனலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் துரைப்பாண்டி, திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள அவரை ஆஜர்படுத்துமாறும், அவருக்கு தேவையான சிகிச்சை, சட்ட உதவி வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். அவருடன் உள்ள மற்றொரு சிறைவாசி கதிரேசனும் சிறைச்சாலையில் உள்ள தொலைபேசியில் இருந்து ஒரே நேரத்தில் பேசியுள்ளதால், சிறைச்சாலை கையேட்டை மீறுவதாக கூறி தனிமை சிறையில் அடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கையளித்துள்ளார். தனிமைச்சிறையில் இல்லை என்றாலும், சிறைவாசிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இனிமேல், சிறைவாசிகளுக்கு சிறு தண்டனை வழங்கும்போது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விபரங்களை எழுத்துப்பூர்வ ஆவணமாக சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்.

இது அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை சிறைத்துறை வகுத்துள்ளது என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாராட்டுகிறோம். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட மத்திய, கிளை சிறைகளுக்கும் சிறைத்துறை தலைவர் தரப்பில் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். அனைத்து சிறைகளிலும் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement