தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு
Advertisement
இதையடுத்து மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வரிசையில் மனுதாரர் குர்பான் அலி தாக்கல் செய்த வழக்கு தெற்கு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெருநகர மாஜிஸ்திரேட் (எம்எம்) கார்த்திக் தபரியா வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீது அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதே விவகாரத்தில் வேறு புகார்கள் வந்துள்ளதா?. விசாரணை நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு டெல்லி போலீஸ் பதிலளிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement