Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு தடை அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள், அந்த நாட்டு சட்டப்படி அமெரிக்க குடிமக்களாக கருதப்படுவார்கள். இந்தியர்கள் உள்பட அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த சட்டம் குடியுரிமை பெற்றுக்கொடுத்தது. அதிபர் டிரம்ப் இந்த சட்டத்தை தனது நிர்வாக உத்தரவு மூலம் ரத்து செய்தார். இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டிரம்ப் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. நேற்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், அதிபர் டிரம்ப் உத்தரவை நிராகரித்தது. மேலும் அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை செல்லும் என்று உத்தரவிட்டது. இந்நாட்டில் பிறக்கும் எவரும் குடிமகனே என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘உள்நாட்டுப் போருக்குப் பிறகு இயற்றப்பட்ட 14-வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிதலையும், சமீபத்திய கூட்டாட்சிச் சட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

குடியுரிமை என்பது - அப்போதும் சரி, இப்போதும் சரி - உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையாகும்; அதாவது நமது அரசியல் சமூகத்தில் சுதந்திரமாகப் பங்கேற்பதாகும். 14-வது அரசியலமைப்புத் திருத்தத்தை உருவாக்கியவர்கள், இந்த மண்ணில் சுதந்திரமாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த வாக்குறுதியை அளித்தனர். இன்று நாங்கள் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறோம்’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தெரிவித்தார்.

* பள்ளி விளையாட்டு அணிகளில் திருநங்கைகளுக்கு தடை உறுதி

திருநங்கைகளுக்கு மற்றொரு பின்னடைவாக, பள்ளி விளையாட்டு அணிகளில் திருநங்கை சிறுமிகள் மற்றும் பெண்கள் விளையாடுவதைத் தடைசெய்யும் மாகாண சட்டங்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. கடந்த ஆண்டில் பலமுறை அமெரிக்க திருநங்கைகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்து வந்த நீதிமன்றத்தின் பழமைவாத பெரும்பான்மையினர், இடாஹோ மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மாநிலத் தடைகள் அரசியலமைப்பையோ அல்லது கல்வியில் பாலினப் பாகுபாட்டைத் தடைசெய்யும் டைட்டில் IX எனப்படும் கூட்டாட்சிச் சட்டத்தையோ மீறவில்லை என்று தீர்ப்பளித்தனர்.