நாசரேத்தில் 4 மாத கர்ப்பிணியான பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
Advertisement
இதனால் விரக்தியடைந்த ஜெர்லின் கோல்டா, பிரவீன்குமார் குளியலறைக்கு சென்ற நேரத்தில் வீட்டின் உள்ள படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார். பின்னர் இதை பார்த்து பதறிய அவரது கணவர் பிரவீன் குமார், ஜெர்லின் கோல்டாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெர்லின் கோல்டா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெர்லின் கோல்டாவின் தாய் ஜான்சிராணி, நாசரேத் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement