தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்களாவுக்கு மின் இணைப்பு கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

Advertisement

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரின் மனைவியும் ஐஎஏஸ் அதிகாரியுமான பீலா, அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவை ராஜேஷ்தாஸ் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பீலா அளித்த புகாரின் அடிப்படையில், அந்த வீட்டிற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ராஜேஷ் தாஸ் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் மின் இணைப்பு வழங்க மின்சார வாரியத்திற்கு உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராஜேஷ் தாஸ் மற்றும் பீலாவுக்கு இடையேயான உரிமையியல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Advertisement

Related News