தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதட்டூர்பேட்டையில் 2வது முறையாக மார்க்கெட் ஏலம்

Advertisement

திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 2025-2026ம் ஆண்டிற்கான தினசரி மார்க்கெட், கட்டண கழிப்பிடம், பேருந்து நிலைய சுங்க வசூல் உரிமம் தொடர்பான பொது ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்றது. குத்தகை உரிமம் ஏலத்தில் ரவி என்பவர் ரூ.16.10 லட்சத்துக்கு ஓர் ஆண்டுக்கான குத்தகை உரிமம் பெற்றார். பேருந்து நிலைய சுங்க வசூல் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

இதில் குத்தகை உரிமம் பெற்றவர்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் ஏலத்தொகையை முழுமையாக 24 மணி நேரத்தில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டும். இருப்பினும் ஏலம் எடுத்தவர்கள் பணம் செலுத்த தவறியதால், ஏலம் ரத்து செய்யப்பட்டு 2வது முறையாக நேற்று நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் வைப்புத்தொகை செலுத்தியவர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.

தினசரி மார்க்கெட் ஏலத்தில் ரூ.11.77 லட்சத்திற்கு லிங்கம் என்பவர் குத்தகை உரிமம் பெற்றார். அதேபோல், வாகன சுங்கவரி வசூல் ஏலத்தில் ரூ.2.01 லட்சத்திற்கு மணி என்பவர் குத்தகை உரிமம் பெற்றார். பொது ஏலத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், இளநிலை உதவியாளர் முருகவேல், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News