தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சல் அலுவலகத்தில் ரூ.5 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது

Advertisement

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் அமர்நாத் (38). இவர், அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்திற்கு மாற்றுப்பணிக்கு சென்று வந்தார். அங்கு பணியாற்றியபோது, கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி, அஞ்சலகப் பணம் ரூ.5 கோடியை தனது வங்கி கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்துள்ளார். இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த 18.5.2024ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பந்தல்குடி பைபாஸ் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அமர்நாத்தை தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்தை மீட்டனர். மீதமுள்ள பணத்தையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அமர்நாத், விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Related News