தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபாச வீடியோக்கள் அனுப்பி டார்ச்சர் 2 பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லையால் மாணவன் தற்கொலை: சக மாணவர்கள் போராட்டம்

திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய் தேஜா(21). எம்விபி காலனியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சாய் தேஜா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சாய் தேஜாவின் மரணச் செய்தியைக் கேட்டதும், அவரது நண்பர்கள் மற்றும் மாணவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது, மாணவரின் பெற்றோரிடம் சாய் தேஜாவை 2 பெண் பேராசிரியர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தனர்.

Advertisement

அவர்களின் துன்புறுத்தலால் மனமுடைந்த சாய் தேஜா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். அதனடிப்படையில் சாய் தேஜாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் வாட்ஸ்அப் மூலம் நடந்த சாட்டிங்கை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண் பேராசிரியர்கள் ஆபாச வீடியோ, ஆடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், கடந்த சில நாட்களாக இந்த துன்புறுத்தல் அதிகரித்து வந்ததால் சாய் தேஜா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதற்கிடையில் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் 2 பெண் பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News