தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்பரப்பிப்பட்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் மண் வெட்டி கடத்தல்

*தடுக்க வலியுறுத்தல்

Advertisement

நாமகிரிப்பேட்டை : பொன்பரப்பிப்பட்டி அருகே, வனத்துறைக்கு சொந்தமான மலையடிவாரத்தில் மண் வெட்டி கடத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பொன்பரப்பிப்பட்டியில், பொன்சொரிமலை முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகே, வனத்துறைக்கு சொந்தமான மலையின் ஒரு பகுதி அடிவாரத்தில், மர்ம கும்பல் சட்ட விரோதமாக மண் வெட்டி, லாரிகளில் கடத்திச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வனத்துறைக்கு சொந்தமான பொன்சொரிமலை அடிவாரத்தில், மர்ம கும்பல் ஒன்று பொக்லைன் மூலம் மண்ணை வெட்டி, டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்ததால், மலையில் இருந்து பெரிய கற்கள் உருண்டு விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, மலைப்பகுதியில் சட்ட விரோதமாக மண் வெட்டி கடத்துவதை தடுக்க வேண்டும். மேலும், மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement