தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சக்குளத்துகாவு பகவதி கோயில் பொங்கல் விழா

திருவனந்தபுரம்: கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில்களில் சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வருடம்தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருட பொங்கல் விழா நாளை மறுநாள் (4ம் தேதி) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத்தூண் உயர்த்தும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 23ம் தேதி நடைபெற்றது. நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும். காலை 9 மணிக்கு பின்னர் கோயில் காரியதரிசி மணிக்குட்டன் நம்பூதிரி கோயில் அணையாவிளக்கில் இருந்து தீபத்தை எடுத்து கொடிவிளக்கில் ஏற்றுவார்.

Advertisement

தொடர்ந்து கோயில் பந்தலில் தனியாக அமைக்கப்படும் பொங்கல் அடுப்பில் சக்குளத்துகாவு கோயில் அறக்கட்டளை தலைவரும், முக்கிய காரியதரிசியுமான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கலிடும் நிகழ்வை தொடங்கி வைப்பார். காலை 11 மணிக்கு பொங்கல் நைவேத்யம் நடைபெறும். தொடர்ந்து மேற்குவங்க மாநில கவர்னர் ஆனந்தபோஸ் கார்த்திகை தூணில் தீபம் ஏற்றுவார். பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Advertisement

Related News