தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Advertisement

தென்காசி: குற்றாலத்தில் பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மூன்று தினங்களாக அவ்வப்போது தூறல் விழுவதால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் நன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறை காரணமாக பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது. ஏற்கனவே கடந்த மூன்று தினங்களாக குற்றாலம் பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது. பகல் வேளையில் வெயில் இல்லை‌. அவ்வப்போது சற்று தூறலும் லேசான மழையும் பொழிகிறது.

இதமான சூழல் மற்றும் தூறல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும் சிறிதளவு அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் ஓரளவு நன்றாக தண்ணீர் வருகிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் ஓரளவு தண்ணீர் நன்றாக வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்புகின்ற பக்தர்களும் குற்றாலம் வருகை தருகின்றனர்.‌ சபரிமலை சீசன் நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே கோவிலில் நடை திறந்திருக்கும் என்பதால் விடுமுறையை பயன்படுத்தி பலரும் சபரிமலை கோவிலுக்கு செல்லுகின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்களு குற்றாலத்தில் நீராடிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement