தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர், நர்சு கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்து ரசித்த டாக்டர் சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பெண் டாக்டர், நர்சு கழிப்பறையில் ரகசிய பேனா கேமரா வைத்து ரசித்த சபல டாக்டரை சிசிடிவி கேமரா காட்டி கொடுத்தது. வசமாக சிக்கிய டாக்டர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்ர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பயன்படுத்தும் கழிப்பறை தனியாக உள்ளது. நேற்று முன்தினம் கழிப்பறைக்கு சென்ற பெண் நர்ஸ் ஒருவர், கழிப்பறை சுத்தம் செய்யும் பிரஷ்ஷில் ரப்பர் பேண்டால் கட்டப்பட்ட பேனா வடிவிலான கேமரா ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து ஆர்எம்ஓ மாரிமுத்துவிடம் தெரிவித்தார். அவர், உடனடியாக மருத்துவமனை கழிப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த பிரஷ்ஷில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

ரகசிய கேமராவை வைத்தது யார்? என்று சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மருத்துவமனையில் 3ம் ஆண்டு எம்எஸ் ஆர்த்தோ பயிற்சி மருத்துவராக பணியாற்றும் பயிற்சி டாக்டர் வெங்கடேஷ் (33) என்பவர் கழிப்பறை பிரஷ்ஷில் ரப்பர் பேண்ட் கட்டி ரகசியமாக பேனா வடிவிலான கேமராவை வைத்து கண்காணித்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் பயிற்சி டாக்டர் வெங்கடேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். வெங்கடேஷ் பயன்படுத்திய ரகசிய கேமரா 12 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் ஆர்டர் வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வெங்கடேஷ் மற்ற மருத்துவமனையில் இதுபோன்று வேறு ஏதாவது பகுதியில் கழிப்பறைகளில் கேமரா வைத்து பெண்களை ரசித்து இருப்பாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் டாக்டர் வெங்கடேஷ், கோவை ஜேஎம்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.

Advertisement

Related News