காவல் நிலைய மரணம் என்பது மிக மிக வேதனைக்குரியது: எடப்பாடி பேட்டி
Advertisement
இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், உரிய நடவடிக்கை நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப்படும் என்பது இந்த விசாரணையில் உதாரணமாக தெரிய வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரையில் 25 காவல் நிலைய விசாரணை மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த வருத்தத்துக்குரியது. இந்த அரசாங்கம் சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பில், மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. அதுவும் காவல் நிலைய மரணம் என்பது மிக மிக வேதனைக்குரியது. இது கண்டனத்துக்குரியது. இது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Advertisement