திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூ டியூபர் சங்கரிடம் விடிய, விடிய விசாரணை நடத்திய போலீசார்; இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்
இந்தநிலையில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம், சங்கரை 7நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி ேகாரி மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக லால்குடி சிறையில் இருந்து பெண் போலீசார் சங்கரை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.அப்போது நீதிபதி ஜெயப்பிரதா, சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீசார் சங்கரை, திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தபோது சங்கரின் வக்கீல் அவரை 3 முறை பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் சங்கரின் ஒரு நாள் காவல் முடிவடைவதால் இன்று மதியம் அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.