தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோ புகாரில் சிஐடி விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜர்

Advertisement

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த பெண் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் எனது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக சிஐடி போலீசார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் நேற்று பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சிஐடி போலீஸ் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் எடியூரப்பா நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நியமனம் செய்யப்பட்டிருந்த துணை போலீஸ் டிஎஸ்பி புனித் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார். புனித் எழுப்பிய பல கேள்விகளுக்கு எடியூரப்பா பதில் கொடுத்ததாக தெரியவருகிறது. பின் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

* ரேவண்ணா, பிரஜ்வல்லிடம் விசாரணை

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பென்டிரைவ் புகாரில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரிடம் சிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

Advertisement

Related News