போக்சோ புகாரில் சிஐடி விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜர்
Advertisement
இந்நிலையில் நேற்று பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சிஐடி போலீஸ் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் எடியூரப்பா நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நியமனம் செய்யப்பட்டிருந்த துணை போலீஸ் டிஎஸ்பி புனித் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார். புனித் எழுப்பிய பல கேள்விகளுக்கு எடியூரப்பா பதில் கொடுத்ததாக தெரியவருகிறது. பின் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
* ரேவண்ணா, பிரஜ்வல்லிடம் விசாரணை
பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பென்டிரைவ் புகாரில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரிடம் சிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
Advertisement