தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தி சினிமா வில்லன் போல பிரதமர் மோடி பேசக் கூடாது: காங்கிரஸ் விமர்சனம்

Advertisement

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, எக்ஸ் சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் பிரசாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தரந்தாழ்ந்து பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியை, ஊடுருவல்காரர்களின் கூட்டணி என்றும், அவர்கள், மாநில மக்களின் வீட்டு மகள்களையும், அவர்களின் உணவையும் பறித்து விடுவார்கள் என்றும் மோசமாக பேசி வருகிறார். மக்களவைக்கு தேர்தல் நடந்தபோது பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி, எருமை மாடு, ஆட்டுக்கறி, மீன், தாலி போன்ற வார்த்தைகளை சேர்த்து எதிர்க்கட்சிகளை சாடினார்.

தற்போது, மகாராஷ்டிரா சட்டபேரவை தேர்தலுக்கான பிரசாரத்தில் மோடியின் பேச்சு அடிமட்ட நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இந்தி சினிமாவின் சி-கிரேடு வில்லன் போல, பிரதமர் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. அவரது பேச்சு, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டபேரவைகளுக்கான தேர்தலில் பாஜ தோல்வி முகம் கண்டு வருவதை நிரூபிக்கிறது. மோடி, தான் வகிக்கும் பதவிக்கு, மீதமுள்ள காலத்தில் பெருமை தேடித் தரும் வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Advertisement

Related News