தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து 3 மணிநேரத்திற்கு பின் தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

அதன்படி சனிக்கிழமையான நேற்றும், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கம்போல இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் 5 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலை நடை திறக்கும் போதே தரிசன வரிசையில் கூட்டம் நிறைந்திருந்தது.

காலை 7 மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. அதனால், சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ராஜகோபுரத்தையும் கடந்து தரிசன வரிசை நீண்டிருந்தது. பொது தரிசன வரிசையில் மட்டுமின்றி, ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியதால், அதிலும் 2 மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Advertisement

Related News