ரூ.4620 கோடி மோசடி புகார் ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 124 பேர் மனு: மேல்விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில், தாங்கள் முதலீடு செய்த ரூ.9 கோடியே 24 லட்சத்து 15 ஆயிரத்தை பெற்றுத் தரக்கோரி ஹிஜாவு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஜென்சி லின்டோ, சாய் தனுஷா, திருவண்ணாமலையை சேர்ந்த சத்யநாராயணா உள்ளிட்ட 124 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் முதலீட்டு பணத்தை மீட்டு தர வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பி.வேலுமணியன், வி.மலர்விழி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை அதிகாரி, மேல்விசாரணை நடத்தி துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.