தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மெய்யநாதன் கடிதம்

சென்னை: பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

Advertisement

முத்தரையர் வம்சத்தின் சிறந்த குறுநில மன்னரான பெரும்பிடுகு முத்தரையர், நீதியான நிர்வாகி, வீரமிக்க போர்வீரர், கலை மற்றும் விவசாயத்தின் பாதுகாவலராக தமிழ் மரபில் போற்றப்படுகிறார், செண்டலை, நார்த்தாமலை மற்றும் காவிரி வடகரையில் உள்ள பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், அவரது ஆட்சி, கோயில் வழங்கல்கள் மற்றும் பாசனப் பணிகள் குறித்து சான்று பகர்கின்றன. அவரது பாசனப் பணிகள் இப்பகுதியை தானிய களஞ்சியமாக மாற்றின. “பெரும் பிடுகு” என்ற பொருள் “மாபெரும் இடி” என்பதாகும்.

இப்பட்டம் அவர்தம் சமகாலத்தவர்களிடையே ஏற்படுத்திய பிரமிப்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நாட்டுப்புறப் பாடல்களும் கோயில் திருவிழாக்களும் அவரது நினைவை உயிரோடு வைத்துள்ளன. பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர்க்கு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படுவதன் மூலம், தேசிய கட்டுமானத்திற்கு ஆரம்பகால தமிழ் மன்னர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படும், இடைக்காலத்திற்கு முந்தைய தமிழ் அரசியல் மற்றும் பண்பாட்டைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படும்,

தமிழ்நாட்டினை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடனான உணர்வுபூர்வ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். நினைவு அஞ்சல்தலை வடிவமைப்பிற்கு தேவையான காப்பக ஆவணங்கள், நிபுணர் ஆலோசனை மற்றும் வடிவமைப்பு உள்ளீடுகள் உள்பட அனைத்து தேவையான ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது, ஒன்றிய அரசின் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News