தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிசி, எம்பிசி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்யக்கோரி மனு

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் கிராமத்தில் கடந்த 2000வது ஆண்டில் நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ், 180 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது.

ஆனால் தற்போது வீடு கட்டாத மனைகளின் பட்டாவை ரத்து செய்வதாக வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட கலெக்டரை சந்திக்க 5 பேரை மட்டும் அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்ததால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனு அளிக்க காவல் துறை அனுமதி அளித்ததையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமாரிடம், வழக்கறிஞர்கள் ஏ.வேல்முருகன், பி.மதன்குமார், குமார், பி.கணபதி தமிழ்வாணன் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்து விளக்கிக் கூறினர். அப்போது 24 ஆண்டுகளாக நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழித்த நிலையில் நிலத்தை முறையாக அளவீடு செய்து வழங்கினால் வீடு கட்டி குடியேறத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பாரதி, சுப்பிரமணி, பாலாஜி, ஆறுமுகம், ராஜா, பாரதி, ஹேமாவதி, பாரதி, சரஸ்வதி, சரளா, நிர்மலா உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News