தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எங்களை தொடர்ந்து விமர்சித்தால் உங்கள் கட்சி காணாமல் போய்விடும்: ஜெகன்மோகனுக்கு பவன்கல்யாண் எச்சரிக்கை

Advertisement

திருமலை: தொடர்ந்து எங்களை விமர்சனம் செய்தால் கட்சியே இல்லாமல் செய்துவிடுவோம் என ஜெகன்மோகனுக்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் நேற்று ெதாடங்கியது. ஏலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஜெகநாதபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அங்கு நடந்த யாகத்தில் பங்கேற்றார். தொடர்ந்து இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்று பயனாளிகளுக்கு சிலிண்டர் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், அவரது தங்கையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஷர்மிளா, தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறினார். அவருக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், தற்போது நடக்கும் எங்கள் ஆட்சியில் நாங்கள் நிச்சயமாக பாதுகாப்பு தருவோம். நீங்கள் கட்சி தலைவராக இருப்பதால் எங்களை விமர்சனம் செய்தாலும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை எங்கள் பொறுப்பாக நாங்கள் நினைக்கிறோம்.

சமூக வலைதளங்களில் என்னையும், என் குடும்பத்தையும் விமர்சனம் செய்தால் நாங்கள் சோர்ந்து விடுவோம் என நினைக்காதீர்கள். ஏற்கனவே மக்கள் உங்களுக்கு (ஜெகன்மோகன்) சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். மேலும், தொடர்ந்து எங்களை விமர்சனம் செய்தால் கட்சியே இல்லாமல் செய்துவிடுவோம்’ என எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement