தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தாசில்தார், விஏஓ கைது

Advertisement

ஈரோடு: பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார், விஏஓ ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவர் பட்டா மாறுதல் கேட்டு, பள்ளபாளையம் ‘அ’ கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, பெருந்துறை தாலுகா மண்டல துணை தாசில்தார் நல்லசாமி, பள்ளபாளையம் ‘அ’ கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் ஆகிய இருவரும் பட்டா மாறுதல் செய்தனர்.

அப்போது தனசேகரனிடம், பட்டா மாறுதல் செய்யப்பட்டவுடன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என இருவரும் பேரம் பேசியதாக தெரிகிறது. அதன்பேரில் தனசேகரனுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் தனசேகரன் லஞ்சம் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து, இருவரும் தனசேகரனிடம் பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து, தனசேகரன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார், மண்டல துணை தாசில்தார் நல்லசாமி ஆகியோரிடம் தான் பணத்தை எப்போது, எங்கே கொடுக்க வேண்டும்? என தனசேகரன் கேட்டுள்ளார்.

அப்போது, பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கே பணத்தை கொண்டு வருமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, திட்டமிட்டவாறு நேற்று தனசேகரன், பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் நல்லசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் ஆகியோரிடம் லஞ்சப் பணம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஈரோடு தலைமை நீதிமன்ற நடுவர் சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News