Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘பெற்றோர் கட்டாயத்தால் வேறொருவருடன் திருமணம்’ காதலனுடன் என்னை சேர்த்து வைக்கவேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்

மதுரை: திருமணமான இளம்பெண், காதலனுடன் வந்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மதுரை மாவட்டம், பரவை, வடக்கு வெள்ளிவீதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். அதே பகுதியில் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் காவியா. இருவரும் காதலித்து வந்தனர். தகவலறிந்த பெற்றோர் காவியாவிற்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து உடனடியாக திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காத காவியா, காதலன் நாகேந்திரனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினார். நாகேந்திரன் - காவியா இருவரும் மதுரை எஸ்பி அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர்.

எஸ்பி அரவிந்திடம் காவியா அளித்த மனுவில், ‘‘நானும், நாகேந்திரனும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனது பெற்றோர் எனக்கு வேறொருவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் என்னை அடித்து துன்புறுத்தியதுடன், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினர். எனது விருப்பத்திற்கு மாறாக வேறொருவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். எனவே, எனக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். நான் விரும்பியவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். எஸ்பியிடம் புகார் அளித்த பின்னர் இருவரும் கிளம்பி சென்றனர்.