பள்ளிப்பட்டு அருகே உள்ள விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா
Advertisement
இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி ஹோமம் நடைபெற்றது. இதன்பிறகு மேள, தாளங்கள் முழங்க புனித நீர் எடுத்துவரப்பட்டு கோபுர கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீ செல்வகணபதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement