தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவு வாங்க காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 25 பேர் பலி

Advertisement

டெய்ர் அல் பலாஹ்: மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலுக்கும், காசாவில் செயல்படும் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட போர் நீடிக்கிறது. இந்த போரில் ஹமாஸ் படையினருக்கு உதவி செய்யும் ஈரான் மீதும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உணவு பொருள்களை வாங்க காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ஈவு, இரக்கமற்ற தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை.

இந்நிலையில் மத்திய காசாவின் டெய்ர் அல் பலாஹ் பகுதியில் நேற்று உதவி மையங்களில் உணவு உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் காத்து கொண்டிருந்தனர். அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் டிரோன் தாக்குதல்களில் 25 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 146 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Advertisement

Related News