தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல் ஈரப்பதம்: 3வது நாளாக ஒன்றிய குழு ஆய்வு

Advertisement

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையாலும், பனிப்பொழிவாலும் நனைந்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேர் கொண்ட ஒன்றிய குழுவினர் கடந்த 22ம்தேதி டெல்டா மாவட்டம் வந்தனர். கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

3வது நாளாக நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே எரவாஞ்சேரி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம், தேவூர் ஆகிய 4இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது நெல்லின் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்ததோடு, நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்தனர். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டம் சென்ற ஒன்றிய குழுவினர், காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம், ராஜேந்திரசோழகன், குப்பங்குழி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், கொள்முதலுக்காக கொண்டு வரப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர்.

Advertisement

Related News