தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழவந்தான் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: குடோனுக்கு எடுத்து செல்ல கோரிக்கை

Advertisement

சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து சென்று பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் முடிந்தன. அறுவடை செய்த நெல்மணிகளை விவசாயிகளிடம் பெறுவதற்காக ரிஷபம், முள்ளிப்பள்ளம், தென்கரை நாராயணபுரம், இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அம்மச்சியாபுரம், பொம்மன்பட்டி, கரட்டுப்பட்டி, நாச்சிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு 40 கிலோ மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மூட்டைகள் வாடிப்பட்டி மற்றும் கப்பலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு (குடோன்) அனுப்பப்படும். இவற்றில் இடம் இல்லாத பட்சத்தில் கூடல் நகர், திருவாதவூர், சிந்தாமணி பகுதியிலுள்ள குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த குடோன்களில் இருந்து அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், தற்போது குடோன்களில் இடமில்லை என காரணம் கூறி நெல் மூட்டைகளை எடுத்து செல்லாததால் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு இடங்களிலும் சுமார் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கின்றன. மழை மற்றும் வெயில் பாதிப்பிலிருந்து காக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடின உழைப்பால் விளைந்த நெல் மணிகள், குடோன் மற்றும் ரைஸ் மில்லில் இடமில்லை எனவும், ஏற்றிச் செல்ல லாரி வரவில்லை எனவும் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி கிடப்பது வேதனையான விஷயம். குடோனில் இடமில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். எனவே கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக குடோனுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement