தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்டர் செய்த தோசை, ஊத்தப்பம் ‘மிஸ்ஸிங்’ பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Advertisement

சென்னை: ஆர்டர் செய்த தோசை, ஊத்தப்பத்தை கொடுக்காததால் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் நுகர்வோர் குறைதீர்ப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பூந்தமல்லியைச் சேர்ந்த ஆனந்த் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செயலியில் ஒரு ஓட்டலில் உணவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். ஊத்தப்பம், தோசை உள்பட ரூ.498க்கு ஆர்டர் செய்துள்ளார். உணவு பார்சலும் டெலிவரிி ஆனது.

ஆனால் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தோசையும், ஊத்தப்பமும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால், மேலும் ஆத்திரம் அடைந்த அவர் திருவள்ளூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விசாரணையில், டெலிவரி நிறுவனம் தரப்பில் வாதிடும்போது உணவகத்துக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே தாங்கள் இடைத்தரகர் போல் செயல்படுகிறோம், ஆர்டர் செய்த உணவை சம்பந்தப்பட்ட ஓட்டலில் இருந்து வாங்கி கொடுப்பதோடு எங்கள் வேலை முடிந்து விடுகிறது. பார்சல் போட்டு தருவது ஓட்டல் நிர்வாகம் தான். அதற்குள் இருக்கும் உணவுகளின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க முடியாது. இந்த வழக்கில் ஓட்டல் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும் என வாதிட்டனர். இதை ஏற்க நுகர்வோர் கோர்ட் தலைவர் லதா மகேஸ்வரி மறுத்துவிட்டார்.

வாடிக்கையாளரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.73 வசூலித்து இருக்கிறீர்கள். எனவே சேவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரி செய்யும் பொறுப்பு உங்கள் நிறுவனத்திற்கு உண்டு. மனுதாரரின் ஒப்பந்தம் உங்கள் நிறுவனத்துடன் நேரடியாக இருக்கிறது. அதற்கான சேவை கட்டணத்தையும் வழங்கி இருக்கிறார். எனவே உணவகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க முடியாது. உணவுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.498ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்காக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement

Related News