அவனியாபுரம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருக்கிறது. மேகதாது அணை குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.
+
Advertisement
