தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

ஊட்டி : ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டைக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஊட்டி வட்டார வள மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது.

கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து துவக்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழு நிபுணர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் நலம், எலும்பு மூட்டு, காது, மூக்கு தொண்டை, கண், அன்னப்பிளவு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு ஆகியவை குறித்து அறிவுரைகள் வழங்கினர்.

மாணவர்களை மதிப்பீடு செய்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனைகள், இலவச ரயில் மற்றும் பஸ் பயணச்சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு உதவித்தொகைக்கான பதிவு செய்யப்பட்டது.

முகாமில் 18 வயது வரை உள்ள சுமார் 72 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களுக்கான மருத்துவ அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுகரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமானது குன்னூர் வட்டாரத்தில் இன்று 12ம் தேதி அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியிலும், கோத்தகிரி வட்டாரத்தில் 13ம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 18ம் தேதி அன்று கூடலூர் வட்டத்தில் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது.

Advertisement