Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

ஊட்டி : ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டைக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஊட்டி வட்டார வள மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது.

கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து துவக்கி வைத்து பார்வையிட்டார். முகாமில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழு நிபுணர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் நலம், எலும்பு மூட்டு, காது, மூக்கு தொண்டை, கண், அன்னப்பிளவு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு ஆகியவை குறித்து அறிவுரைகள் வழங்கினர்.

மாணவர்களை மதிப்பீடு செய்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனைகள், இலவச ரயில் மற்றும் பஸ் பயணச்சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு உதவித்தொகைக்கான பதிவு செய்யப்பட்டது.

முகாமில் 18 வயது வரை உள்ள சுமார் 72 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களுக்கான மருத்துவ அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுகரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமானது குன்னூர் வட்டாரத்தில் இன்று 12ம் தேதி அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியிலும், கோத்தகிரி வட்டாரத்தில் 13ம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 18ம் தேதி அன்று கூடலூர் வட்டத்தில் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது.