தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்த சிவப்பு நிற சால்வியா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரியில் செப்டம்பர், அக்டோபரில் இரண்டாம் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. இச்சீசனின் போது வெளிநாடு, பிற மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இதையொட்டி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 17 ஆயிரம் மலர் தொட்டிகளில் பராமரிக்கப்பட்ட மேரிகோல்டு, சால்வியா, பேன்சி, அம்ரந்தஸ், டெய்சி, டேலியா, பிக்கோனியா, சைக்ளோமன் போன்ற செடிகளில் மலர்கள் பல வண்ணங்களில் பூத்து காணப்பட்டது. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு மாதங்களாக ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

Advertisement

தற்போது பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் காய்ந்து போய்விட்டது. மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளும் வாடிவிட்டன. இதனால் இந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், பூங்கா முழுவதிலும் தற்போது சிவப்பு நிறத்தில் பூத்துள்ள சால்வியா மலர்கள் மட்டும் வாடாமல் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பூங்காவிற்குள் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள இந்த சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். முதல் சீசனுக்கான பணிகள் ஓரிரு நாட்களில் துவக்கப்படும் நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் இனி வரும் ஏப்ரல் மாதமே பூக்களை காண வாய்ப்புள்ளது. சால்வியா மலர்கள் கவாத்து செய்யப்படும் வரை இந்த மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.

Advertisement

Related News