தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் யாரும் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம்: விழிப்புணர்வு வீடியோ மூலம் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை

சென்னை: ஆன்லைன் விளம்பரங்கள் பார்த்து பொதுமக்கள் யாரும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை விழிப்புணர்வு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தள பக்கங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் பார்த்து பொதுமக்கள் யாரும் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டு மற்றும் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை விழிப்புணர்வு குறும்படம் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

அந்த வீடியோவில் சினிமா நடிகர் காளிசரண் நடித்துள்ளார். அந்த விழிப்புணர்வு வீடியோவில் , ‘காளி சரண் தனது அலுவலகத்திற்கு மகிழ்ச்சி வருகிறார். தனது செல்போனில் ஆன்லைன் விளம்பரங்கள் பார்த்து முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்கிறார். அதற்கு மோசடி நபர்கள் அவருக்கு ரூ.1 லட்சமாக பணம் திரும்பி வழங்குகின்றனர். இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் கடன் பெற்று ஆன்லைனில் முதலீடு செய்கிறார்.

அப்போது மோசடி நபர்கள் ஒரு கோடியில் இருந்து ரூ.3 கோடிக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். இதனால் நீங்கள் ரூ.2 கோடி கட்டினால் உங்களுக்கு ரூ.6 கோடி திருப்பி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். அதை நம்பி தனது வீடு மற்றும் மனைவியின் நகைகளை விற்பனை செய்து ரூ.2 கோடி கட்டுகிறார். அதன் பிறகு, பணம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியவில்லை. இது குறித்து மோசடி நபர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள் உங்கள் பணத்தை நாங்க தரமாட்டோம் என்று சொல்ல வில்லை.

எங்களுக்கான மேனேஜிமென்ட் பீஸ் ரூ.50 லட்சம் கட்டிவிட்டு மொத்த பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி மொத்த பணத்தையும் ஏமாற்றுவிடுகின்றனர். பணம் கடன் கொடுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்வது போன்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது’. இந்த வீடியோ சென்னை பெருநகர காவல்துறை இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்த சிறிது நேரத்தில் பொதுமக்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Related News