தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒலிம்பிக் திருவிழாவையொட்டி களைகட்டியது பாரீஸ் நகரம்: இந்தியா சார்பில் 117 வீரர்கள் களம் காண்கின்றனர்

Advertisement

பாரீஸ்: 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடனும், கோலாகலத்துடனும் நாளை தொடங்க உள்ளது. உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிக பெறும் விளையாட்டு திருவிழா. வளர்ச்சி அடைந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என போட்டிபோட்டு களமிறங்கும் ஆடுகளம் இது. ஒவ்வொரு வெற்றியிலும் மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு பெருமை சேர்க்கும் பதக்கங்கள் இவை அனைத்தையும் ஒன்றிணைகிறது ஒலிம்பிக்.

2024ம் ஆண்டுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒலிம்பிக் திருவிழாவையொட்டி பாரீஸ் நகரமே கலைக்கட்டியுள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பிரேக் டான்ஸ் எனப்படும் நடன போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. நடன கலைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

32 விளையாட்டு போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர். இந்தியா சார்பில் 16 போட்டிகளில் மொத்தமாக 117 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா உள்பட தடகள போட்டிகளில் 27 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன்,வித்தியா ராமராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கங்களை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Advertisement

Related News