தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுடுகாட்டில் இறுதி சடங்கின்போது கண்விழித்து தண்ணீர் கேட்ட மூதாட்டி: உறவினர்கள் அலறி ஓட்டம்

Advertisement

திருச்சி: திருச்சி அருகே விஷம் குடித்ததாக சிகிச்சை பெற்ற மூதாட்டி இறந்ததாக கருதி தகனம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தபோது திடீரென அவர் கண்விழித்து தண்ணீர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியை சேர்ந்தவர் பம்பையன். இவரது மனைவி சின்னம்மாள்(60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சின்னம்மாளின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பார்வை மங்கலானது. இதற்காக அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மதுரையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருந்தும் கண்ணில் அவருக்கு அவ்வப்போது வலி ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்(17ம் தேதி) சின்னம்மாள் வலி தாங்க முடியாமல் தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அவரது மகன் சுப்பிரமணி(46) மற்றும் உறவினர்கள் அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை எடுத்துவிட்டால் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர். பின்னர் அவரது உறவினர்கள் சின்னம்மாளை வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் சின்னம்மாளை வீட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாச கருவியை எடுத்துள்ளனர். அதன்பின்னர் அவரது உடல் அசைவின்றி காணப்பட்டது.

இதனால் அவர் இறந்து விட்டதாக கருதி வீட்டுக்கு செல்லாமல் தகனம் செய்வதற்காக நேராக எஸ்.மேட்டுப்பட்டியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுரைக்காய்பட்டி சுடுகாட்டுக்கு ஆம்புலன்ஸ் சென்றதுடன், சின்னம்மாளின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் சுடுகாட்டுக்கு வந்து சின்னம்மாளுக்கு இறுதி சடங்கு செய்தனர். துக்கத்தில் உறவினர்கள் சின்னம்மாள் மீது விழுந்து கதறி அழுதனர். அப்போது திடீரென சின்னம்மாள் கண்விழித்து உறவினர் ஒருவரின் கையை பிடித்து தண்ணீர் கேட்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது தான் அவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. பின்னர் ஆம்புலன்சை திரும்ப வரவழைத்து நேற்று மதியம் அவரை திருச்சி அரசு மருத்துவமனயைில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2வது நாளாக இன்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News