தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிர்வாண நிலையில் சடலம் மீட்பு திருமணத்துக்கு மிரட்டியதால் பியூட்டிசியன் கொலை அம்பலம்: கள்ளக்காதலன் கைது

கோபி: வாழை தோட்டத்தில் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்ட இளம்பெண், பியூட்டிசியன் என்பதும், அவர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலனான தோட்ட உரிமையாளர் கொலை செய்ததும் அம்பலமானது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே கெட்டிசெவியூரை சேர்ந்தவர் மோகன்குமார் (27). பி.காம் படித்துள்ள இவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் ஒரு இளம்பெண் நிர்வாண நிலையில் 3 அடி குழியில் புதைக்கப்பட்டு கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

விசாரணையில் அவர், அந்தியூர் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சோனியா (35) என்றும், ஈரோடு அருகே உள்ள திண்டலில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிசியனாக வேலை செய்ததும், சோனியாவின் கணவர் ராஜேந்திரன், 2 ஆண்டுக்கு முன் இறந்தநிலையில் பிளஸ் 2 படிக்கும் மகள், 10வது படிக்கும் மகன் மற்றும் தாய் ராஜாமணியுடன் ஆப்பக்கூடலில் வசித்ததும் தெரிய வந்தது.

சோனியாவின் செல்போன் சிக்னலை சோதித்தபோது அவர் தோட்ட உரிமையாளர் மோகன்குமாருடன் பலமுறை பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2 ஆண்டுகளுக்கு முன் புதுக்கரைபுதூரில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் மோகன்குமார் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில் சோனியாவும் வேலை செய்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. மோகன்குமாருக்கு குழந்தை இல்லாததால் 2 மாதங்களுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் தன்னை திருமணம் செய்யும்படி சோனியா வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு விவசாய தோட்டத்திற்கு சோனியாவை வரவழைத்துள்ளார். அப்போது அவர் தன்னை திருமணம் செய்யாவிட்டால் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்குமார், கல்லால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து ஏற்கனவே வெட்டி வைத்த குழியில் தள்ளி புதைத்துள்ளார்.

சோனியாவின் செல்போன், ஆடைகளை வேட்டைகாரன் கோயிலில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வீசியுள்ளார். போலீசார் உடலை மீட்டு விசாரித்தபோது கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் இயல்பாகவே பதில் கூறி உள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை அங்கேயே விட்டு சென்றதும், கொலை செய்த போது சிந்திய ரத்த துளிகளும் அவரை காட்டி கொடுத்து விட்டது. அதைத்தொடர்ந்து மோகன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News