தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடமாநில தொழிலாளர்கள் ஹோலி கொண்டாட்டம்

Advertisement

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டப்பணிகள் முதல் மலைதோட்ட காய்கறி சாகுபடி வரை ஏராளமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட், பீகார், அஸ்ஸாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த வடமாநிலத்தவர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தனியார் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளுடன் குடியிருப்புகளும் ஏற்படுத்தி கொடுத்து,அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதேப்போல் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹோலி பண்டிகையன்று விடுமுறை அளிக்காத நிலையில், அவர்களுக்கு ஓய்வு இடைவெளி கொடுக்கப்படும் நேரங்களில் தற்போது வரை ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். இதனிடையே நேற்று நான்சச் பகுதியில் உணவு இடைவெளிக்கு வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வர்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற பண்டிகை காலங்களில் தனியார் தோட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement