தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வட கிழக்கு பருவமழை தீவிரம் தென் மாவட்டங்களில் 2 நாள் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Advertisement

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், தற்போது பருவமழை மிகத் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. வட மாவட்டங்களில் திருத்தணி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களிலும் நேற்று மழை பெய்தது.

இதற்கிடையே, கோவை, திண்டுக்கல், சேலம், திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. வால்பாறையில் 4 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும், சென்னை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருப்பத்தூர், புதுச்சேரியில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாகவும் வெப்பநிலை காணப்பட்டது.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அத்துடன் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இதேநிலை 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News