தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகொரியாவில் அதிபர் கிம் மேற்பார்வையில் 2 ஏவுகணை சோதனை

Advertisement

சியோல்: வடகொரியா நடத்திய இரண்டு ஏவுகணை சோதனைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியா அண்டை நாடுகள் எதிர்ப்பை மீறியும் உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை மீறியும் அவ்வப்போது தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. எனினும் தடைகளுக்கு கட்டுப்பட மறுத்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரண்டு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்ததாக அண்டை நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடனான மோதல் வலுத்து வரும் நிலையில் தனது ஆயுத பலத்தை வடகொரியா விரிவுபடுத்துவதாக கூறப்படுகின்றது. அதிபர் கிம் ஜாங் உன், அணுசக்தியை வலுப்படுத்துவது மற்றும் வழக்கமான ஆயுதங்கள் துறையில் மிகப்பெரிய தாக்குதல் திறனை பெறுவது அவசியமாகும் என்று ராணுவத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் ராணுவ பலம் இருந்தால் மட்டுமே எதிரிகளின் படையெடுப்பை முறியடிக்க முடியும் என்றும் கிம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Related News