தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடக்கு அமுதுண்ணாக்குடியில் மது பிரியர்களின் பாராக மாறிய மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்

Advertisement

*நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சாத்தான்குளம் : வடக்கு அமுதுண்ணாக்குடியில் மதுபிரியர்களின் பாராக மாறி வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு அமுதுண்ணாக்குடியில் அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி அருகே அரசு சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்தாய்வில் ஈடுபட்டனர்.

தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்ததால் எந்தவித பயன்பாடும் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இந்த கட்டிடத்தின் சுவர் மற்றும் மேற்கூரைகள் விரிசல் விழுந்த நிலையில் காணப்படுகிறது. எந்த நேரமும் இக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் இக்கட்டிடத்தில் கதவுகள் உடைந்து திறந்த நிலையில் காணப்படுவதால் மது பிரியர்கள் மது அருந்தும் பாராக இக்கட்டிடத்தை மாற்றியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கட்டிடத்தை பார்வையிட்டு சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News